யாழ்.மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மீண்டும் மலேரியா நோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் மலேரியா மற்றும் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு மலேரியா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் ஐந்து மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளிகள் Anopheles pulciparum இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இம்முறை கண்டறியப்பட்ட நோயாளிகள் Anopheles stephensi வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் மலேரியா ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் சான்றிதழை வழங்கியுள்ள போதிலும், இலங்கையர்கள் மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு செல்வதனால், இலங்கையில் மலேரியா அச்சுறுத்தல் 100 வீதம் ஒழிக்கப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் மலேரியா மற்றும் தொற்றுநோய் பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
|