இலங்கை சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!
கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 112, 415 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
மேலும், இதுவரையான காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து 19,353 பேரும், ரஷ்யாவில் இருந்து 17,225 பேரும், பிரித்தானியாவில் இருந்து 9,178 பேரும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையானது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டி
பிபிசி டிராவல் (BBC Travel) இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சுற்றுலா வழிகாட்டியில், இலங்கையில் உள்ள மூடுபனி, மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பழங்கால கோவில்கள் மற்றும் அலைச்சறுக்கு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாக விவரிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan