இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் கட்டணங்கள்! வெளியானது அறிவிப்பு

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
