இந்திய கரையோர காவல் படையினர் கைப்பற்றிய இலங்கை மீன்பிடி படகில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
இந்திய கரையோர காவல் படையினர் கைப்பற்றிய இலங்கைக்குச் சொந்தமான ரவிஹங்சி என்ற ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்த சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அந்த ஆவணங்களில் ஆயுத கடத்தல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மீன்பிடி படகிலிருந்து கிடைத்த இரகசிய ஆவணங்களில் காணப்படும் தகவல்கள் இரகசியமானவை என்பதால், அவை என்ன தகவல்கள் என்பது வெளியாகவில்லை.
இந்த ஆயுத கடத்தலுக்காக இந்தியாவின் நாகப்பட்டினம் கொச்சின் உட்பட நான்கு இடங்களில் பாதுகாப்பான வீடுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் எனவும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.