இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் டீசலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை நேற்று செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்காக முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக ஒரு வருடத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாவது ஜெட் எரிபொருள் எதிர்வரும் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.