நீரை கவனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வழங்கியுள்ளது.
அதன்படி நீரை கவனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நீர்த்தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விடயத்தை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் குறித்து வெளியான தகவல்
இந்ந நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே நீரை சேகரித்துப் பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |