இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஜூம்மா தொழுகையை நடத்த அனுமதி வழங்கி, சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிக்காட்டல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கு அமைய இஸ்லாமியர்கள் தமது பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகையை நடந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூம்மா தொழுகைக்கு மாத்திரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் 50 பேருடன் இந்த தொழுகை நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஒரு தொழுகை மாத்திரமே நடத்தப்பட வேண்டும் என்பதுடன் பள்ளிவாசலுக்குள், வெளியில் மற்றும் உழு (சுத்தப்படுத்துதல்) செய்யும் இடத்தில் அதிகளவில் கூட்டம் கூட கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் பக்தர்களில் கோரிக்கையை ஆராய்ந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
