தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை: கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பில் முறைப்பாடு செய்த முதலாவது நபர் தாம் என்பதால், தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி
தனது முறைப்பாடு தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வது அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கருதினால் அதற்கு தாம் தயாராக இருக்கின்றேன்.
அமைச்சில் இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போது தரமற்ற
இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்
புலனாய்வுப் பிரிவினரிடம் முதல் முறைப்பாடு செய்திருந்தேன்.
இது தொடர்பில் ஆலோசனையைக் கோரி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளேன்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |