இந்திய ஏகபோகத்தின் கீழ் மருந்துகள் இறக்குமதி - குற்றம் சுமத்தும் தொழிற்சங்கம்
இந்திய (India) ஏகபோகத்தின் கீழ் 47 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இலங்கையின் சுகாதார அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை சுகாதார சேவைக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ் வலியுறுத்தியுள்ளார்.
பதிவு செய்யப்படாத மருந்துகள்
மேலும், இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் மருந்துகளின் தரம் மீண்டும் கேள்விக்குள்ளாகும் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவில் சுகாதாரத்துக்கு கேடு என்ற அடிப்படையில் 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri