தேங்காய் இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை
மறு ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால்மாவு மற்றும் குளிர்ந்த தேங்காய் சொட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரும், கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளனர்.
தேங்காய் இறக்குமதி
அதன்படி, குறித்த குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை சாகுபடி திணைக்களம், தென்னை மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI) ஆகிய நிறுவனங்கள் இணைந்து அண்மையில் கைத்தொழில் அமைச்சில் ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri