கந்தளாயில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
திருகோணமலை - கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் கந்தளாய் தி/அல் தாரிக் மகா வித்தியாலய கேட்போர் கூடத்திலும், கந்தளாய் வட்டுக்கச்சி மத்திய மருந்தகத்திலும் இன்று(20) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
29 வயதிலிருந்து அறுபது வயது வரைக்குள்ள இளைஞர்கள், முதியோர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஒரு முறை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறைந்தளவிலான பொதுமக்களே தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.