சமூக வலைத்தள காணொளியால் சிக்கிய சட்டவிரோத செயல்!
சட்டவிரோத தெரு பந்தய நிகழ்வு ஒன்று குறித்து ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முன் அனுமதி
இந்நிலையில், பந்தயத்தை நடத்துவதற்கு எந்தவொரு தொடர்புடைய அதிகாரியிடமிருந்தும் முன் அனுமதி பெறப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த வீதிகள் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி ஏப்ரல் 13 அன்று இரவு 11:43 மணிக்கு முகப்புத்தகத்தில் 'பாக்கெட் ராக்கெட்ஸ் கிளப்' என்ற குழுவால் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத தெரு பந்தயம்
காட்சிகளின்படி, ஹோமாகமவில் உள்ள வீதியில் கலவிலவத்தையில் பகுதியில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருந்து சட்டவிரோத தெரு பந்தயம் தொடங்கியதாகத் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த பந்தயம் சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முறைப்பாடு அளித்ததாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தெரு பந்தயத்தை ஏற்பாடு செய்து பங்கேற்பதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam