லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக முறைப்பாடு! - உடன் விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, காவல்துறை அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை செய்திருந்தது.
இது தொடர்பிலேயே அமைச்சர் வீரசேகரவின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.