புலனாய்வாளர்களின் இரகசிய தகவல்: இந்தியாவில் இலங்கையர் உட்பட இருவர் கைது
தமிழகத்தில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் (Chennai) 270 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி அகதிகள் முகாம்
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்படுள்ளனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து, 150,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 2.7 கிலோ மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும், மணிப்பூரின் ஒருவரும் அடங்குகின்றனர்.
இதில் விஜயகுமார் என்பவரே கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 13 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
