முல்லைத்தீவில் ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலத்தால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு- அம்பலவன் பொக்கணை, மாத்தளன் மக்களுக்கு இன்றையதினம்(1) ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தார்.
அத்தோடு, கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் களத்தில் இணைந்து இரவு வரை பணியாற்றியுள்ளனர்.
நிவாரணப்பணிகள்
அதுமட்டுமன்றி, தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களுக்கு அடுத்த கட்ட நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளன.

மேலும், தமிழர் தாயகம் உட்பட நாடளாவிய ரீதியில் பெரும் வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலத்துடன் கரங்கோர்க்க விரும்புவோர் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri