சுனாமியில் காணாமல் போன மனைவி - ஒன்பது வருடங்களாக கடலில் தேடும் கணவர்
ஜப்பானில் சுனாமியின் போது காணாமல் போன தனது மனைவியை 11 ஆண்டுகளாக தேடிவரும் கணவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011ம் ஆண்டு ஜப்பானில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதுடன் சுமார் 20 ஆயிரமை பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த அனர்த்தம் ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்து விட்டன. இது ஜப்பானில் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு தம்பதியர் வசித்து வந்தனர்.
சுனாமியின்போது தம்பதி வசித்துவந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நான் சாகும்வரை அவளைத் தேடிக்கொண்டே இருப்பேன்
அப்போது யூகோ காணாம ல்போனதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சுனாமியில் உயிர்பிழைத்த அவர் கணவர் யசுவோ, சுமார் 11 வருடங்களாகத் தன் மனைவியைத் தேடிவருகின்றார்.
தற்போது 65 வயதாகும் யசுவோ தனது மனைவியின் உடலை எப்படியாவது கண்டுபிடிப்பேன் என நம்பிக்கையுடன் இரண்டு ஆண்டுகள் நிலத்திலும், 2013ம் ஆண்டிலிருந்தது கடல் பகுதியிலும் தேடி வருகின்றார்.
தற்போது ஒவ்வொரு வாரமும் தன் மனைவியின் உடலைத் தேடி அவர் கடலில் டைவிங் செய்து வருவதாக கூறப்படுகின்றது. இது குறித்து யூகோ தகமாட்சு கருத்து வெளியிடுகையில்,
பேரழிவுக்குப் பிறகு மனைவியின் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பிற உடைமைகள் மீட்கப்பட்டன.
யூகோவிடமிருந்து கடைசியாக ஒரு செய்தி வந்தது. எனினும், அவளுடைய உடலை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நான் சாகும்வரை அவளைத் தேடிக்கொண்டே இருப்பேன்'' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 4 நாட்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam
