வெளிநாட்டில் வசிக்கும் கணவன் - இலங்கையில் மனைவியின் காதலனை கொலை செய்ய சதித்திட்டம்
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நபரைத் தாக்கி கொலை செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராமவின் காவந்திஸ்சபுர பகுதியில் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் மீரிகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆகும்.
பொலிஸ் விசாரணைகள்
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், தனது மனைவியின் காதலனை தாக்குவதற்கு மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரன்மிஹிதென்னவில் வசிக்கும் காதலனின் புகைப்படம், வட்ஸ்அப் மூலம் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.