கோட்டாபயவால் விடுதலை செய்யப்பவட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

United Nations Human Rights Michelle Bachelet
By Mayuri Sep 13, 2021 12:44 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது தினத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில் மேலும்,


இலங்கை மற்றும் அதன் போக்குகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான எனது இறுதி அறிக்கையை மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கம் அனுப்பிய உள்ளீடுகளை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஜூன் மாத ஜனாதிபதியின் அறிக்கை குறித்து நான் அவதானம் செலுத்தியுள்ளேன்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதோடு, தேவையான நிறுவனசார் சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

2021 ஜனவரியில் நியமிக்கப்பட்ட தேசிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை விரைவாகவும் பகிரங்கமாகவும் வெளியிடுவதை நான் ஊக்குவிக்கிறேன், இது இந்த வருட இறுதிக்குள் அதன் ஆணையை நிறைவு செய்யும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அதன் பின்ன பரிந்துரைகளை மதிப்பீடு செய்ய முடியும். இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சவால்கள், அடிப்படை உரிமைகள், ஜனநாயக நிறுவனங்கள், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மை தொடர்ந்து நீடிக்கிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 30ஆம் திகதி இலங்கைவில் புதிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அவசரகால விதிமுறைகள் மிகவும் பரந்தவை மற்றும் பொது மக்கள் செயற்பாடுகளில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டார்.

அவர்களின் செயற்பாட்டை அலுவலகம் உன்னிப்பாகக் கண்காணிக்கும். சில சிவில் சமூகத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் அண்மைய சந்திப்பை நான் ஆர்வத்துடன் அவதானிக்கின்றேன்.

மேலும் இலங்கைவில் சிவில் சமூகத்துடனான பரந்த உரையாடல் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறேன். துரதிஷ்டவசமாக, மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை தொடர்வது மாத்திரமல்லாமல், அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள்.

அமைதியான பல போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல்களை முன்னெடுத்தவர்கள் அதியுச்ச அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டனர் அல்லது கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிவில் சமூகக் குழுக்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, மேலும் அவை அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் என்று பரவலாக அஞ்சப்படுகிறது.

விரிவான சாத்தியமான விவாதத்தை அனுமதிக்க வரைபு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். பல முக்கிய மனித உரிமை வழக்குகளில் நீதித்துறை நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்ற சட்டமா அதிபரின் தீர்மானமும் இதில் அடங்கும். பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், 2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தொடர்ந்து உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டில் அரசியல்வாதியைக் கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியின் அண்மைய பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி செயன்முறை மீதான நம்பிக்கையை சிதைக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

காவல்துறை தடுப்புக்காவல் உயிரிழப்புகள் மற்றும் போதைப்பொருள் குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கியவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

மார்ச் மாதத்தில், புதிய "தீவிரமயமாக்கல்" விதிமுறைகள் அறிமுகமாகியதோடு, இது தனிநபர்களை இரண்டு வருடங்கள் வரை விசாரணையின்றி தன்னிச்சையாக நிர்வாகக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறித்து நான் அவதானம் செலுத்தியுள்ளேன். 300ற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புளை பேணுவதாக அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது அல்லது பட்டியலிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட 16 கைதிகள் தண்டனைக் காலம் முடிவடையும் தருவாயில் மன்னிக்கப்பட்டனர். சட்டத்தின் கீழ் கைதிகள் தங்கள் வழக்குகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்கக்கூடிய ஒரு ஆலோசனை சபை நிறுவப்பட்டுள்ளது, மேலும் இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை நான் வலியுறுத்துகிறேன்.

பயங்கரவாத தடை சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதோடு இதற்காக அமைச்சரவை துணைக்குழுவை அமைத்துள்ளது. எனினும் மக்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

சட்டத்ரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இப்போது 16 மாதங்களாக குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் மே 2020 குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன்.

மேலும் அதன் விரிவான ஆய்வு அல்லது இரத்து செய்ய ஒரு தெளிவான காலக்கெடு அமைக்கப்பட வேண்டும். இழப்பீடுகளுக்கான தேசியக் கொள்கை ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் இழப்பீடு கொடுப்பனவுகள் மற்றும் நல்லிணக்கத் திட்டங்கள் தொடர்ந்தன. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் ஆறாவது பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டது - ஆனால் அது பாதிக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்.

வெளிப்படையான, பாதிக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட மற்றும் பாலின உணர்திறன் அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், மேலும் இழப்பீட்டு திட்டங்கள் பரந்த உண்மை மற்றும் நீதி நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும்.

கடந்த மாதம், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி, பரிஸ் கோட்பாடுகளுடன் இணங்குவதைத் தீர்மானிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட மதிப்பீட்டை ஆரம்பிக்க தீர்மானித்தது ஆணைக்குழுவின் நியமன செயன்முறை மற்றும் அதன் மனித உரிமை ஆணையை நிறைவேற்றுவது ஆகிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பின்னணியில், தீர்மானம் 46/1 இன் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களைச் செயல்படுத்துவதற்கான எனது அலுவலகத்தின் பணிகள் ஆரம்பமாகியது. ஒரு ஆரம்ப குழுவின் ஆட்சேர்ப்பு நிலுவையில் உள்ளது. ஐநாவினால் ஏற்கனவே 120,000 தனிப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் மற்றும் ஆதாரக் களஞ்சியத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், மேலும் இந்த வருடம் முடிந்தவரை தகவல் சேகரிப்பை ஆரம்பிப்போம்.

நிதி ஒதுக்கீட்டு செயல்முறைக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிப்பதை உறுதி செய்ய உறுப்பு நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் எனது அலுவலகம் இந்த வேலையை முழுமையாக செயற்படுத்த முடியும்.

பேரவையின் உறுப்பினர்கள் இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் நம்பகமான முன்னேற்றத்தைத் ஆராயவும் நான் ஊக்குவிக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US