'உடைந்த சூரியன்'...! புகைப்படத்தால் திகைத்த ஆய்வாளர்கள்; பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா...! (Video)
சூரியனின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத்தில் சுற்றி வருகிறது. இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
சக்தி வாய்ந்த சூரியன் குறித்துக் மேலதிகமாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்போது சூரியினில் நிகழ்ந்துள்ள அற்புதமான மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.
கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள்
இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது டுவிட்டரில் இதைப் பகிர்ந்திருந்தார். சூரியனில் இருந்து எப்போதும் சோலர் பிளார்ஸ் வெளியாகும்.
இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல் தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும். இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டரில், "சூரியனில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது.
ஆய்வாளர்கள் திகைப்பு
அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார். சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறமாக விரிவடையும்.. கடந்த காலங்களிலும் இதுபோல பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
ஆனால், இந்த முறை அது தனியாக வந்து பெரிய சூழலை உருவாக்கியதே ஆய்வாளர்களைத் திகைக்க வைத்துள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கத் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ஸ்காட் மெக்கின்டோஷ் இது தொடர்பாகக் கூறுகையில்,
"சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும்போது இவ்வளவு பெரிய சூழல் ஏற்படுவதை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு ஆபத்தா...!
இவரை மட்டுமின்றி பல்வேறு ஆய்வாளர்களையும் சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு திகைக்க வைத்துள்ளது. இப்போது வரை சூரியனின் ஒரு பகுதி இப்படி தனியாகப் பிரிந்ததால்.
பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை. இந்த விவகாரத்தில் ஆய்வாளர்கள் மத்தியிலேயே குழப்பம் தொடர்ந்து வருகிறது. இருப்பினும், சூரியனின் காந்தப்புலத்தின் தலைகீழ் மாற்றத்துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் சந்தாகின்றனர்.
அதாவது ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும்.. அதற்கும் இப்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Talk about Polar Vortex! Material from a northern prominence just broke away from the main filament & is now circulating in a massive polar vortex around the north pole of our Star. Implications for understanding the Sun's atmospheric dynamics above 55° here cannot be overstated! pic.twitter.com/1SKhunaXvP
— Dr. Tamitha Skov (@TamithaSkov) February 2, 2023

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
