இத்தாலிய தெற்கு கடற்கரையில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு
இத்தாலிய அதிகாரிகள் சிசிலியின் தெற்கு கடற்கரையில் கப்பல்களுக்கு இடையில் பரிமாற்றப்பட்ட 5.3ன் கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சரக்கு 850 மில்லியன் யூரோக்கள் பெறுமதி என இத்தாலிய பொலிஸார் விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 850 மில்லியன் யூரோக்கள் சரக்கு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அதிகாலையில் தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச்சென்ற ஒரு கப்பலைக் ஒரு கண்காணிப்பு விமானம் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, சிசிலி ஜலசந்தியில் ஒரு மீன்பிடி இழுவைக் கப்பலில் இருந்து பொதிகள் ஏற்றப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதன்போதே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதினையடுத்து இரண்டு துனிசியர்கள், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியன் மற்றும் ஒரு
பிரெஞ்சு நாட்டவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
