இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 400,000 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வெளிநாடு செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்பது விசேட அம்சமாகும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் அடுத்த 60 நாட்களுக்கு திகதிகளும் நேரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
யாராவது வேலைக்காக அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அதை உறுதி செய்ய வாட்ஸ்அப் மூலம் 0706311711 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri