வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
நீர்கொழும்பு, கட்டான பிரதேசத்தில் 2 மாடி வீட்டில் மிகவும் நுட்பமான முறையில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைக்கு சென்ற போதும், அந்த இடத்தில் மதுபானம் காய்ச்சப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த சட்டவிரோத மதுபான விற்பனை சில காலமாக நடைபெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை வீடு
எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த இரண்டு மாடி கட்டடத்தை மாதந்தோறும் 60,000 ரூபாய்க்கு வாடகைக்கு வாங்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீரிகம பகுதியை சேர்ந்தவராகும்.
சட்டவிரோத மதுபானம்
இந்த சட்டவிரோத மதுபானம் மினுவங்கொட, நாதபொல, நீல்பனகொட, கட்டுவெல்லகம, ஹப்புவலான மற்றும் மரடகஹமுல ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மதுபானத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 400,000 ரூபாயாகும். கைது செய்யப்பட்ட எட்டு பீப்பாய் சட்டவிரோத மதுபானம், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு தண்ணீர் மோட்டார் ஆகியவற்றுடன் சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.