வான் எல மகாவித்தியாலயத்திலன் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப்படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
தி/கி /வான் எல மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப்படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இவ்வாண்டில் (2024) பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி மாவட்ட, மாகாண மட்ட அடிப்படையில் தமது திறமைகளை காட்டி அகில இலங்கை பாடசாலைப் போட்டிகளிலும் தமது பாடசாலையினையினை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களே இவ்வாறு கொரவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கெளரவித்து வரவேற்பும், ஊர்வலமும் பாடசாலையின் பாடசாலை அதிபர் ஏ. எஸ் ஜாபீர் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மாகாண மட்டத்தில் வெற்றி
இந்த கெளரவிப்பு நிகழ்வில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று அகில இலங்கை பாடசாலை மட்ட கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான மாணவர்கள், பாடசாலை மட்ட போட்டியில் உதைபந்தாட்டத்தில் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவான மாணவர்கள், வலைப்பந்தாட்டத்தில் மாவட்ட மட்டத்தில் பங்குபற்றிய மாணவிகள் என பலரும் கெளரவிக்கப்பட்டனர்.
உதவி அதிபர் S.சஜீட், விளையாட்டு ஆசிரியர் ARM.அஜாஸ், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வாகிட் ஆகியோரின் ஒத்துழைப்போடும், சக ஆசிரியர்கள், பெற்றோர்களின் பங்குபற்றுதலோடும் பாடசாலையின் அமைவு இடத்திலிருந்து ஆயிலியடி கிராமத்திலுள்ள பகுதிகளுக்கு சாதனை மாணவர்கள் ஊர்வலமாக மாலை அணிவித்தும், பதக்கம் அணிவித்தும் கொண்டு வரப்பட்டு கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.