பிரித்தானிய பிரதமரின் செயலால் கடும் கோபத்திற்குள்ளாகிய உள்துறை செயலாளர்
பிரித்தானியாவில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக புதிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் புறக்கணித்தமையினால் பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் (Preeti Patel) கடும் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் பிரச்சினைகளை வெறும் "ஓநாய் ஊளையிடும்" விடயம் போல் பிரதமர் கருதுவதாகவும்,இந்த விடயம் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில்,சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,பிரித்தானியாவை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்ற விரும்புகின்றதாகவும் ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது, பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் பொது இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தலை ஒரு குற்றமாக மாற்றக்கூடிய சட்டரீதியான மதிப்பாய்வை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வது குறித்து படேலின் ஆலோசனை, 180,000 பங்களிப்பாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றதால், பிரதமர் பொதுமக்களின் மனநிலையை முற்றிலும் தவறாக மதிப்பிட்டுள்ளதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
