ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை
ஹம்பாந்தோட்டையில் இந்த வருடத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ஒருவரே இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த அதிகரிப்புக்கான காரணம் குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.
உரிய சிகிச்சைகள்
இந்நிலையில், மாவட்டத்தில் இந்த வருடம் 21 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள அவர், மாவட்டத்தில் மொத்தமாக 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களில் பெரும்பாலானோர் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, மனித நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள இந்த வைரஸ் ஒரு இறுதி நோயல்ல என்று தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைகள் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam