அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாய் படகில் ஏற்றிவிட்டு காட்டிக்கொடுக்கும் கடத்தல்காரர்கள் - செய்திகளின் தொகுப்பு
இளைஞர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கூட்டி செல்வதாகப் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடம்பெயர்வு குறித்த தகவல்களை வழங்குவதாகத் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோத இடப்பெயர்வாளர்கள் பற்றிய தகவல்கள் நாட்டில் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பெருமளவான பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெறுவதாகவும் அதை பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,



