இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் குறிவைக்கப்படுவார்கள்! நெதன்யாகுவின் எச்சரிக்கையால் தீவிரமடையும் பதற்றம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, "தேவைப்படும் இடங்களில் எல்லாம்" ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேவைப்படும் இடங்களில் தாக்குதல்
"எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் எவரும் குறிவைக்கப்படுவார்கள்.""வடக்குப் பகுதி மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை நாங்கள் மீட்டெடுக்கும் வரை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.

"தெற்கு லெபனானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.
ஆயிரக்கணக்கான ஆயுதங்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கடக்கும் இடங்கள், அத்துடன் ஆயுதக் கிடங்குகள், ஏவுதளங்கள் மற்றும் ஹிஸ்புல்லாவின் கட்டளை மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த தாக்குதல்கள் தொடர்பான இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் காணொளி காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கடுமையான மீறலுக்கு சமம்
" ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளர் நயீம் காசிமின் செயலாளரும் மருமகனுமான அலி யூசுப் ஹர்ஷி கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்ததைத்தொடர்ந்து அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இந்த போர்நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் முன்னதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் ஒப்பந்தத்தின் "கடுமையான மீறலுக்கு" சமம் என்று ஈரான் கூறியுள்ளது.
இதேவேளை, போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து தனது முதல் தாக்குதல்களாக, வடக்கு இஸ்ரேல் மீது நேற்றிரவு ராக்கெட்டுகளை ஏவியதற்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றது.
நேற்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றை போர் நிறுத்த மீறல்கள் என்றும் விவரித்தமை குறிப்பிடத்தக்கது.