சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: வெளியான தகவல்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கின் முக்கிய அரசு தரப்பு சாட்சியான மொஹமட் மலிக், வெவ்வேறு நேரங்களில் நீதிபதிகள் முன் முரண்பட்ட நிலைப்பாட்டை, தாம் வெளிப்படுத்தியதாக இன்று ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 மே மாதம் நீதிவான் முன் அளித்த வாக்குமூலத்தின்போது, தாம் பொய் கூறியதாக அவர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அல் ஸுஹ்ரியா அரபிக் கல்லூரியை விட்டு வெளியேறியது எப்படி என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரின் தொடர்ச்சியான கேள்விகளின் போதே , தாம் பொய் கூறியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான நீதிவான் முன், தனது சாட்சியத்தில்,தாம் பாடசாலையை விட்டு குதித்து தப்பி ஓடிவிட்டதாக கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், விடுமுறை முடிந்து நாடு திரும்பிய பின்னர், தாம் வீட்டிலேயே தங்கியிருந்ததாக நீதிவானிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
மேலதிக விசாரணை
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், தனித்தனி சந்தர்ப்பங்களில் தமது வீட்டிற்குச் வந்து படத்தைக் காட்டி சாட்சியிடம் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை அடையாளம் காட்டக்கூறியதாகவும் சாட்சி தெரிவித்தார்.
இந்தநிலையில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான மேலதிக விசாரணையை புத்தளம் மேல் நீதிமன்ற நடி அபர்ணா சுவந்துருகொட ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
புத்தளம் அரபிக் கல்லூரியில் தீவிர கொள்கை உரை நிகழ்த்தியதான குற்றச்சாட்டின்
பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், மற்றுமொருவரும் புத்தளம் மேல்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.