வவுனியாவில் தொடரும் அதிக பனி: பயணிகள் அசௌகரியம்(Photos)
வவுனியாவில் தொடரும் பனி மூட்டம் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில தினங்களாகக் காலை வேளைகளில் அதிக பனி மூட்டமாகக் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடரும் இப்பனி மூட்டம் காரணமாக வவுனியா மாவட்டமானது நுவரெலியா போன்று மாறி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்பனி மூட்டம் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள்
ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.