நிபா வைரஸ் அச்சுறுத்தல் - மிகுந்த எச்சரிக்கையுடன் அவதானிக்கும் இலங்கை
உலகம் முழுவதும் சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மிகுந்த எச்சரிக்கை
எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ளனர்.எனவே, இந்த நேரத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவான உடனேயே சுகாதார அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஆபத்தான தொற்று
இது கடந்த கோவிட் (Covid-19) தொற்றைப் போன்றதல்ல, இது மிகவும் ஆபத்தானது. கடந்த 4 நாட்களில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஜனவரியில் 277,000 பேர் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர்.

எனவே, நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். வைரஸ் தொற்றிய உணவு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ இது பரவலாம். உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தொற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்துள்ள முன்னுரிமை நோய்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.
இதன் காரணமாக சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri