ஹரி புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை
இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹரி புரூக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 22 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐ.பி.எல்லில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஹரி புரூக் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த சீசனில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
இருப்பினும், கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு வீரருக்கும் தெரிவிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam