இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு
மடகஸ்காரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாதாள உலக குற்றவாளிகளான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட, வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் 27 வயதான குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷித ஆகியோர் உள்ளிட்ட எட்டுப் பேர் மார்ச் 01ம் திகதி மடகஸ்கரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, 15ம் திகதி புதன் கிழமை காலை மடகஸ்காரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்று, கொழும்புக்கு அழைத்து வந்துள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து 90 நாட்களுக்கு அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
செய்தி-அனதி
முதலாம் இணைப்பு
வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மடகஸ்கரில் வைத்து நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்சிக்க எனப்படும் குடு சலிந்து ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மடகஸ்கருக்கு சென்றிருந்தனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் மேலும் ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு வெளிநாட்டு பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam