கோட்டாபயவிற்கு எதிராக யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து போராட்டம்(Photo)
சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கையின முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசாங்கம் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையால் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் யாழ்.நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிக்கு முன்னால் இன்று சனிக்கிழமை(06) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து போராட்டம்
எமது தாய் மண்ணில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட 2009 இனவழிப்பின் உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றின் சூத்திரதாரியான கோட்டாபயவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.
மேலும், எமக்கான நீதியை பெற்று தருமாறு வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவே தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான கோரிக்கை
இந்த கையெழுத்து போராட்டம் தாயகத்தில் ஒவ்வொரு பிரதேசமாக ஒவ்வொரு நாளும்
இடம்பெறும் எனவே இந்த போராட்டத்தில் இணைந்துக்கொள்வது தாயகத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை என
நினைத்து வேற்றுமைகளை மறந்து ஒரே இலட்சியத்திற்காக ஒன்றுபட்டு கையெழுத்திட
அழைக்கின்றோம் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தலைவர் எஸ்.நிசாந்தன் கோரிக்கை
விடுத்துள்ளார்.