தமது தலைவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு
லெபனானில் செயற்பட்டு வந்த தமது தலைவர், ஃபதே ஷெரிப் அபு அல்-அமீன், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இன்று (30.09.2024) கூறியுள்ளது.
'PFLP' அமைப்பு என்பது இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் மற்றொரு போராளிக் குழுவாகும்.
ஈரானின் நட்பு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தமது எதிர்ப்பை அதிகரித்து வரும் நிலையில், பெய்ரூட்டின் கோலா மாவட்டத்தை குறிவைத்து, அதன் இராணுவம் நடத்திய தாக்குதலில், தமது மூன்று தலைவர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன விடுதலைக்கான பொப்புலர் ஃப்ரண்ட் (PFLP) தெரிவித்துள்ளது.
உடனடி கருத்து இல்லை
இந்த தாக்குதல், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்டது என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேல் இராணுவத்திடம் இருந்து, இது தொடர்பில் உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மற்றும் யேமனில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிராக இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்கள், மத்திய கிழக்கின் சண்டை, கட்டுப்பாட்டை மீறி இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையும், எதிரி நாடான ஈரானையும் மோதல் ஒன்றில் ஈடுபட வைக்கக் கூடும் என்ற அச்சத்தை தூண்டியுள்ளது.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை யேமனில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இடம்பெயரும் மக்கள்
அத்துடன், லெபனானில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெபனானின் சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த இரண்டு வாரங்களில் 1,000இற்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 6,000 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

எனினும், இதில் எத்தனை பொதுமக்கள் உள்ளடங்கியுள்ளனர் என்று அமைச்சு கூறவில்லை.
இந்தநிலையில், ஒரு மில்லியன் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக லெபனான் அரசாங்கம் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam