மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளை அச்சுறுத்தி கையெழுத்து பெற்றுள்ளனர்
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துககொண்ட மின்வலு அமைச்சின் அதிகாரிகள் இணங்காத இரண்டு ஆவணங்களில் ஆணைக்குழு அழுத்தங்களை கொடுத்து கையெழுத்து பெற்றுக்கொண்டுள்ளது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறைத்தண்டனை வழங்க போவதாக அச்சுறுத்தப்பட்ட அதிகாரிகள்
இந்த சம்பவம் குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தனக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறு மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அவர்ளுக்கு சிறைத்தண்டனை வழங்க போவதாக அச்சுறுத்தி கையெழுத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
1) I was informed by Sec Min of Power & Energy that the officials that took part in the discussion with Human Rights Commision has informed that they had been pressurized to sign 2 documents that they did not agree by 2 members of HRC & was threatened with jail sentences.
— Kanchana Wijesekera (@kanchana_wij) January 27, 2023
நடந்த சம்பவம் தொடர்பான எழுத்து மூலம் முறையிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்பாக நேற்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அதனை எழுத்து மூலம் அரசியலமைப்பு பேரவைக்கு தெரியப்படுத்த உள்ளதாகவும் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.