வவுனியாவில் மதுபோதையில் குழப்பம் ஏற்படுத்திய கிராமசேவகர்: அதிருப்தியில் மக்கள்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கிராமசேவையாளர் ஒருவர் மதுபோதையில் வந்து குழப்பத்தில் ஈடுபட்டதாக கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலர் மண்டபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரால் பொதுமக்களுக்கான இலவசஅரிசி வழங்கும் செயற்பாடு நேற்று (13.05.2023) காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மக்களுக்கு இடையூறு
இதன்போது மண்டபத்திற்கு சென்ற கிராமசேவகர் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிற்கு இடையூறுகளை விளைவித்ததுடன். மதுபோதையில் வந்து, பெண்களையும் திட்டியதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலவரத்தை சுமூகமாக்கியதுடன் கிராமசேவகரை அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் கிராமசேவகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள்
அதிகாரியிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
