தபால் மூல வாக்களிப்பில் அரசாங்கத்திற்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும்
தபால் மூல வாக்களிப்பில் அரசாங்கத்திற்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என ஶ்ரீலங்காக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுஜன முன்னணி கட்சி நுவரெலியா மாவட்டத்தில் நடத்திய பிரசாரக் கூட்டங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து அரச ஊழியர்கள் கள்வர்கள், சோம்பேறிகள் என குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே பல அரச பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரசாரக் கூட்டங்கள் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சீ.பி. ரட்நாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam