கூட்டுறவுத் திட்டத்தில் இருந்து விலக அரசு நடவடிக்கை: நளின் பெர்னாண்டோ
கூட்டுறவுத் திட்டத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசின் தலையீட்டினால் கூட்டுறவுச் சேவை பாதிக்கப்படுமாயின், அதன் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கூட்டுறவுத் தொழில்
கூட்டுறவில் இருந்து அரசாங்கம் எவ்வாறு வெளியேறுவது என்பது பற்றி நாங்கள் இப்போது சிந்திக்கிறோம். கூட்டுறவு ஒரு பெரிய நிறுவன கட்டமைப்பில் செயல்படும் திறனைக் கொண்டுள்ளது.
கூட்டுறவுத் தொழிலில் அரசு தலையிட்டால் கூட்டுறவுத் தொழிலில் அரசு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
எமக்கு தேவையான தலையீட்டை நாங்கள் முன்மொழிந்தால், அந்தத் தலையீடு கூட்டுறவு வணிகங்கள் மூலம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நாங்கள் முன்மொழிந்தால் இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது எனது புரிதல்.
எனவேஇ இது தொடர்பாக எதிர்காலத்தில் முடிவெடுக்க என பிரதமரும் தானும் ஆலோசனை செய்துவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |