தேர்தல் சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை
ஜனாதிபதிதேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் அந்த நிறுவனங்களின் பிரதான உத்தியோகத்தர்கள் என்பதால் அவர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் முறைகேடு நடந்தால் அந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு
இதன்படி, இது தொடர்பில் தமது கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
