வடமராட்சியில் காணிகளை அரசு அபகரித்து விட்டதா..! பிரதேச செயலகம் வெளியிட்ட பதிவு
வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு, காரையோர பாதுகாப்பு திணைக்களங்கள் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரனால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திடம் கோரிய தகவலிற்கு அவர்கள் வழங்கிய பதிலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிகள் அபகரிப்பு
பல ஏக்கர் தனியார் காணிகள் உட்பட அரச காணிகளும் வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்ட முரணாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு மக்களால் பல தடவைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளன.
இந்நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் இல்லை என குறிப்பிடப்படுவது வியப்பாகவுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam