வடமராட்சியில் காணிகளை அரசு அபகரித்து விட்டதா..! பிரதேச செயலகம் வெளியிட்ட பதிவு
வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு, காரையோர பாதுகாப்பு திணைக்களங்கள் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ. முரளிதரனால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திடம் கோரிய தகவலிற்கு அவர்கள் வழங்கிய பதிலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிகள் அபகரிப்பு
பல ஏக்கர் தனியார் காணிகள் உட்பட அரச காணிகளும் வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்ட முரணாக கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு மக்களால் பல தடவைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கோரிக்கை விடுக்கபட்டுள்ளன.
இந்நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் இல்லை என குறிப்பிடப்படுவது வியப்பாகவுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan