பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு
விவசாயத் துறையின் தரத்திற்கு இணங்க பதப்படுதப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த பேரிடர் சூழ்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை அடையாளம் காணவும், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்குத் தெரிவிக்கவும், மாவட்ட செயலாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை ஊடகங்கள் மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடனடி தீர்வுகளை வழங்க
இது விநியோகஸ்தர்கள், அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களைத் தொடர்புகொண்டு அடையாளம் காணப்பட்ட பொருட்களை வழங்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவை முறையாக விநியோகிப்பதில் ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க லிட்ரோ கேஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடுத்தர கால நிவாரணம் வழங்குவதற்காக, பிரதேச செயலாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும், பிற அரசு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களையும் பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam