அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் அடுத்த திங்கட்கிழமை முதல் வழமையை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றரிக்கை இன்றைய தினம் வெளியிடப்படும் என எதி்ர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் நீடித்தாலும் அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் அன்றைய தினம் முதல் பணிக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயில், அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் வழமையை போன்று மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக அரச நிறுவனங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் ஊழியர்களை அழைக்கும் அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான சுற்றரிக்கை கடந்த மே மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam