வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் செயற்பாடு நாளை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர மற்ற வாகனங்களுக்கான வருமான உரிமங்கள் நாளை முதல் கிடைக்கும் என்று மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேல் மாகாணத்தில் குறித்த நடவடிக்கை கடந்த 13 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை ஒக்டோபர் 12 முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதிப் பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.
மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri