ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் ஜேர்மனியில் ஒரு மணிநேரத்திற்கான ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 12 யூரோவாக உயர்த்துவது, அதிபர் Olaf Scholz மற்றும் அவரது சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களில் ஒன்றாககும்.
இது குறித்து ஜேர்மன் தொழிலாளர் அமைச்சர் Hubertus Heil கருத்து தெரிவிக்கையில்,
குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் ஜேர்மனியின் தேசியப் பொருளாதாரம் உண்மையில் நீண்ட காலத்திற்கு அதிக உற்பத்தித் திறன் பெறுவதற்கு வழிவகுக்கிறது.
கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஊழியர்கள் மற்றும் பாரம்பரியமாக மிகக் குறைந்த ஊதியம் உள்ள சேவைத் தொழில்களில் பணிபுரியும் பெண்கள் பயனடைய வேண்டும்.
ஊதிய உயர்வு மசோதாவை வெள்ளிக்கிழமையன்று மற்ற அமைச்சரவைக்கு அனுப்பியதை உறுதிப்படுத்தியது.மேலும் சமூக ஜனநாயகக் கட்சியின் கூட்டணி கட்சிகள் இதை எதிர்க்கமாட்டார்கள்.
பெப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சரவையில் இந்த மசோதா குறித்து விவாதிப்போம்.
பின்னர், ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும், எனவே அக்டோபர் 1ம் திகதி குறைந்தபட்ச ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri