இலங்கையில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி
புவியியல் பணியகத்தின் அனுமதியின்றி சுங்கத்தினூடாக தங்கம் கலந்த மண் கொள்கலன் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக புவியியல் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுங்கத் திணைக்களத்திடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத நடவடிக்கை
இவ்வாறு பெறப்படும் தங்கம் கலந்த மண்ணை முறையான அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சட்டவிரோத நடவடிக்கை பல தடவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, F.M.F லங்கா ஏற்றுமதி நிறுவனத்தினால் தங்கம் கலந்த 5 கொள்கலன் மண் ஏற்றுமதி செய்யப்பட்டது. அத்துடன், 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தங்கம் கலந்த மண் ஏற்றுமதி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் சுங்க அதிகாரிகளின் முறையான பரிசோதனையின்றி ஏற்றுமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதில் சுங்கத்துறை அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பது தணிக்கைத் துறையின் பரிந்துரை. இதில் தொடர்புடைய புவியியல் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தங்கம் கலந்த மண் ஏற்றுமதி மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர வேறு நோக்கங்கள் உள்ளதா என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தணிக்கைத் துறை அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
