இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்று திரளும் தமிழ் மக்கள்
ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
#GoBackGota என்ற முழக்கத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளையதினம்(22) உரைநிகழ்த்தவுள்ளார்.
இந்நிலையில் முற்பகல் 11 மணிக்கு ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.