நாம் விலை போய்விடுவோம் - தத்தளிக்கும் இலங்கை தொடர்பில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட தகவல்
அமெரிக்க அழுத்தங்களுக்கு எமது அமைச்சர்கள் தொடர்ந்தும் அடிபணிந்து இலங்கைக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ( ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி இலங்கை ரூபா) கடனை வழங்க இழுத்தடித்தால் நாம் விலைபோய்விடுவோம் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீன ஜனாதிபதி சி ஜிங்பிங்கின் ஜுனியர் பங்காளியான விளாடிமீர் புட்டினின் ஏற்பாட்டில் இந்தியப் பிரதமர் மோடி சீன ஜனாதிபதியை சந்திப்பதற்குத் தயாராகிவருவதாக ரஷ்யத்தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அழுத்தங்களுக்கு எமது அமைச்சர்கள் தொடர்ந்தும் அடிபணிந்து இலங்கைக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை வழங்க இழுத்தடித்தால் நாம் விலைபோய்விடுவோம் என்ற எச்சரிக்கையையும் சுப்பிரமணிய சுவாமி விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், வெளிநாட்டு கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா - சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் கோரியுள்ளது. இவ்வாறான பின்னணிலேயே, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ராஜபக்ஸகளின் நீண்டகால நம்பிக்கைக்குரிய நண்பரான சுப்பிரமணியன் சுவாமி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
If "koi nahin aaya" which shows a deplorable ignorance, Modi according Russian announcement is expected to meet Xi soon brokered by junior partner Putin. If further our Ministers under US pressure drag their feet on loan to Sri Lanka of $ 10 billion it means we are sold out.
— Subramanian Swamy (@Swamy39) December 31, 2021