இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற 74 வயதான ஹங்க் பிரெட் ஹைன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறுகியகால விடுமுறை
உயிரிழந்தவர் தனது மனைவியுடன் குறுகியகால விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரையில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் இலங்கையர்களும் ஒன்று சேர்ந்து நீரில் மூழ்கியவரை மீட்டு பேருவளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளார். பேருவளை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை சடலத்தை களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam