அதிக -ஆபத்தான பகுதிகள் பட்டியலில் மேலும் 35 நாடுகளை சேர்த்த ஜேர்மனி
உலகளவில் மீண்டும் ஒமிக்ரோன் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஜேர்மனியின் 'அதிக-ஆபத்தான பகுதிகள்' பட்டியலில் மேலும் 35 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் 35 உலக நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜேர்மனிக்கு பயணம் செய்யும் போது கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை முதல், இந்த நாடுகள் ஜேர்மனியின் அதிக ஆபத்துள்ள பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
வெளிநாட்டில் உள்ள கோவிட் நிலைமையைப் பற்றி, ஜனவரி 14 வெள்ளிக்கிழமை நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இதனை அறிவித்துள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளின் பட்டியல் பின்வருமாறு,
அல்பேனியா
ஆன்டிகுவா மற்றும் பார்புடா
எக்குவடோரியல் கினியா
பெனின்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
பல்கேரியா
புர்கினா பாசோ
கோஸ்ட்டா ரிக்கா
டொமினிகன் குடியரசு
ஜிபூட்டி
எரித்திரியா
பிரான்ஸ் - செயின்ட் பியர் மற்றும் மிக்குலோனின் பிரெஞ்சு கடல்கடந்த பிரதேசம்
காம்பியா
கினியா-பிசாவ்
கயானா
கொலம்பியா
லாட்வியா
லைபீரியா
மடகாஸ்கர்
நெதர்லாந்து - செயின்ட் மார்ட்டின் நெதர்லாந்து இராச்சியத்தின் கடல்கடந்த பகுதி
நைஜர்
வடக்கு மாசிடோனியா
ஆஸ்திரியா - மிட்டல்பெர்க் மற்றும் ஜங்ஹோல்ஸ் சமூகங்கள் மற்றும் வோம்ப் மற்றும் எபென் ஆம் அச்சென்சீ சமூகத்தில் உள்ள ரிஸ் பள்ளத்தாக்கு தவிர
பெரு
பிலிப்பைன்ஸ்
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
லூசியா வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
சாவோ டோம் மற்றும் பிரின்சிபி
செனகல்
செர்பியா
சோமாலியா
சுரினாம் சாட்
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
கடந்த வாரம் ஜேர்மனியின் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பட்டியலில் மொத்தம் 39 உலக நாடுகள் சேர்க்கப்பட்டன, அவற்றில் அவுஸ்திரேலியா, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, ஸ்வீடன், ருவாண்டா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan