இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட ஜேர்மன் அதிபர்
ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கல் இரு வேறு வகைகளில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், அவர் முதலில் அஸ்ரா செனகாவின் முதல் டோஸையும் மொடர்னாவின் இரண்டாவது டோஸையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதிபர் அங்கெலா மெர்க்கல் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ரா செனகாவின் முதல் அளவைப் பெற்றார்.
எனினும், பின்னரான காலப்பகுதியில் அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு பற்றிய தகவல்களால் சில நாடுகளில் அஸ்ரா செனகா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜேர்மன் அதிபர் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னாவைப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.